Scroll

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

பொது இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பதாகைகள், கொடிகள், சின்னங்கள் வரைதல் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டுவது தொடர்பான வரையறைகள்

சாதாரண உள்ளாட்சித் தேர்தல்-2019

உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றிடவும், தேர்தல் நடத்தை விதிகளின்படி பொது இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பதாகைகள், கொடிகள், சின்னங்கள் வரைதல் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டுவது தொடர்பாக பின்வரும் வரையறைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

  • தமிழ்நாடு திறந்தவெளிகள் (உருக்குலைப்புத் தடுப்பு) சட்டம் 1959 இல் பார்வையில்படும் பொது இடங்கள் என்பது, ஒரு பொது இடத்தில் இருக்கும் அல்லது கடந்து செல்லும் ஒரு நபரின் பார்வையில்படும் தனியார் இடம் / கட்டிடம் அடங்கும். 
  • இத்தகைய இடங்களில் உரிமையாளரின் அனுமதியிருந்தாலும், சுவரில் எழுதுவதோ, சுவரொட்டி போன்றவற்றை ஒட்டுவதோ கூடாது. 
  • ஓர் இடத்தின் உரிமையாளரின் சம்மதம் பெறப்பட்டுள்ளது என்ற காரணத்தின் அடிப்படையில் எந்த சூழ்நிலைகளிலும் சுவரில் எழுதுவதோ அல்லது சுவரொட்டி ஒட்டுவதோ கூடாது என தெரிவிக்கப்படுகிறது.
என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.